Sunday, December 25, 2011

swamimalai abhishaegam




மன்னார்குடி மாஃப்யாவின் வேலையா?
ஸ்வாமிமலையிலுள்ள அருள்மிகு ஸ்வாமினாதஸ்வாமி எங்கள் குலதெய்வம் ஆகையால் அடிக்கடி அங்கு சென்று அபிஷேகம் செய்வது வழக்கம். அபிஷேகக்கட்டணம் ரூபாய் 600 ஆக இருந்தது. அதேபோல் இந்த வருடம் டிசம்பர் முதல் வாரத்தில் அபிஷேகம் செய்யச்சென்றபோது அபிஷேகக் கட்டணம் ரூபாய் 600 லிருந்து ரூபாய் 1500 ஆக ஜூன் முதல் தேதியிலிருந்து உயர்த்தப்பட்டதாக அறிந்து அதிர்சி அடைந்தோம். 250% கட்டண உயர்வா? நல்ல வேளையாக கையில் போதுமான பணம் கொண்டு சென்றிருந்ததால் சமாளித்தோம்.கையில் அவ்வளவு பணம் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்? இக்கோவில் இந்து அற நிலையத்துறையின் நிர்வாகக் கட்ட்ப்பாட்டுக்குள் வருகிறது. அபிஷேக திரவியங்களிலோ முறைகளிலோ ஒரு மாறுதலும் இல்லாத நிலையில் இத்தகைய பெரும் உயர்வுக்கு என்ன அவசியம்?
இன்றைய தினமலரில் கோயம்பேடு வாகன நிறுத்த நிர்வாகத்தில் CMDA போர்வையில் மன்னார்குடி மாஃப்யாவைச்சேர்ந்த மகாதேவன் நடத்திய திருவிளையாடல்களைப் பற்றிப் படித்தபோது மேற்கண்ட கட்டண உயர்வும் இந்து அறநிலையத்துறையின் போர்வையில் மன்னார்குடிக் கும்பல் நடத்திய சதியோ என்று சந்தேகம் எழுகிறது. இது குறித்தும் தக்க விசாரணை நடத்த வேண்டியது அவசியமாகிறது.  

No comments:

Post a Comment