அணைப்பிரச்சினையை அரசியலாக்குவதா?
முல்லைப்பெரியாறு அணைப்ரச்சினை தீவிரமடைந்து வரும் இந்நிலையில் கவலைக்கிடமளிக்கும் சில எண்ணங்கள் மனதை அலைக்கழிக்கின்றன.
வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் நமது பாரத தேசத்தின் சிறப்பம்சமாக பன்னெடுங்காலமாகப்போற்றப்படுகிறது. பல மொழிகள்,பல மதங்கள்,பல சித்தாந்தங்கள் இணக்கத்தோடு வாழும் ஒரே நாடு இந்தியாதான் என்றால் அது மிகையாகாது. ‘செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள்’ என்று பாரதியாரால் பாடப்பட்ட தேசம் இது.தற்போது,அணை,நதிநீர் போன்ற பல பிரச்சினைகளால் மானிலங்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொள்வது மனதிற்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது.
முல்லைப்பெரியார் அணை உடையுமா உடையாதா, எத்தனை அடி உயரத்திற்கு அதில் தண்ணீர் தேக்கி வைக்க முடியும், அணையின் உயரத்தை அதிகரிக்கலாமா கூடாதா போன்ற technical கேள்விகளுக்கு சாமான்ய மக்களான நம்மிடத்தில் பதில் இல்லை.இத்துறையில் நிபுணர்கள் ஆராய்ந்து பதில் சொல்ல வேண்டிய கேள்விகள் இவை. ஆனால் கேரளாவும் சரி, தமிழகமும் சரி,தனக்கு சாதகமாக அறிக்கை தரும் நிபுனர்களை நியமித்து அறிக்கை பெற்று தான் சொல்வதே சரி என்று வாதிட்டு வருகின்றன. இன்னிலையில் இரண்டு மாநிலங்களும் சேர்ந்து ஒரு ஒத்த முடிவை எட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படவில்லை. இத்தகைய stale mate ஐ எதிர் பார்த்துத்தான் உச்ச நீதி மன்றம் 18/2/2010 அன்று ஒரு empowered committee ஐ நியமித்திருக்கிறது. இந்த கமிட்டியில் நடுநிலையான பல நிபுணர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்தக்கமிட்டியின் அறிக்கை February 2012 ல் சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது. இந்நிலையில் இர்ண்டு மாநிலங்களும் இந்த அறிக்கையைப்பார்த்து அதன்படி முடிவெடுப்பதல்லவோ சரியாக இருக்கும்? இதை விட்டு பிரச்சினையை அரசியலாக்கி ஒன்றுமறியாத மக்களின் உணர்ச்ச்களை எழுப்பி இரண்டு மாநிலங்களிலும் வன்முறையைத்தூண்டி விடுவது எந்த விதத்தில் நியாயம்? தமிழகத்திலிருந்து சபரிமலை செல்லும் பக்தர்களைத்தடுப்பதும்,தமிழகத்திலுள்ள மனையாளிக்கடைகளை அடித்து நொறுக்குவதும் நம் தேசத்தின் அடிப்படை சிறப்பான வேற்றுமையில் ஒற்றுமையின் அடிவாரத்தையே தகர்ப்பதாக இருக்கிறது. இரண்டு மாநிலத்தின் மூத்த தலைவர்களும் இதை உணர்ந்து வன்முறையைத்தவிர்த்து உச்ச நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட கமிட்டி யின் முடிவை ஏற்று செயல் பட்டு நம் நாட்டின் பாரம்பரியத்தைக் காப்பாற்றுவார்களா?
T.S.Krishnamurthy
GB,Subramanya Apartments
199,Lake View Road
West Mambalam
Chennai-600033
No comments:
Post a Comment